அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நான் அரசியலுக்கு வரவில்லை என்று அண்ணாமலை பேசி இருப்பது அதிமுகவில் புகைச்சலை கிளப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று செல்லூர் ராஜு கூறியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அண்ணாமலை, செல்லூர் ராஜு அண்ணன் சொன்னது போல மத்தியில் மோடி, மாநிலத்திற்கு எடப்பாடி என்று எப்படி நான் சொல்ல முடியும். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கு தான் நான் இங்கு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.