தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை தடுக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், கோடை விடுமுறைக்கு மத்தியில் சில தனியார் பள்ளிகள் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.

இது மாணவர்களின் மீது உளவியல் சார்ந்த மனஅழுத்தத்தை உருவாக்கும். எனவே பள்ளிக்கல்வித்துறை தலையிட்டுச் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.