கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது எனவும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.