விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்கூண்டு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சுரேஷ் கம்பால் செல்வராஜை தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் சுரேஷுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.