தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாளை சென்னையில் அதிமுக சார்பாக விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடத்தப்பட்டது. மேலும் முதல்வருக்கு மேகதாது அணை பற்றியும் கவலையில்லை மக்களை பற்றியும் கவலை இல்லை. தக்காளி விலை உயர்வால் எங்களால் வீட்டில் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என்று அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்