டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தியுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.10, ஃபுல்லுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே, அரசு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு பாட்டிலுக்கான விலையுடன் கூடுதலாக ஊழியர்கள் பணம் கேட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.