பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்குவதாக மக்களவை நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தற்போது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று மதியம் ஒரு மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.