டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 பேர் வாக்களித்தனர். டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக ஒருவர் வாக்களித்தார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள்  பிரிந்து செல்லவில்லை என்பதை நிரூபிக்கவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இருவருக்கு உடல் நலம் சரியில்லை, 3 பேர் சொந்த பணிக்காக வெளியூர் சென்றுள்ளனர், இருவர் சிறையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன.