காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தமிழகத்தில் உள்ள எட்டு டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.