கர்நாடக மாநிலம் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க முடியாது என்று அறிவித்தது. ஆனால் தமிழக விவசாயிகள் கர்நாடகா அரசு காவிரி நீரை கட்டாயம் திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் கர்நாடகா அரசை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இருந்தாலும் டெல்டா மாவட்டங்களில் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட நிகழ்வுகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.