தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.

இதை முன்னிட்டு தமிழக அரசு கலை மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை (மே6) முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாகவும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.