தமிழகத்தில் காலையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி ஒன்றில், டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மது பிரியர்கள் விரும்புகிறார்கள்.

மேலேயும் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பதன் மூலம் பாட்டில் பயன்பாடு குறையும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த நிலையில் இது குறித்து விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.