புதுக்கோட்டை மாவட்டம் பயணிகளுடன் தனியார் பேருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வம்பன் நான்கு ரோடு பகுதியில் சென்ற கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அகதீஸ் என்பவர் பேருந்தை முந்தி சொல்ல முயன்றார். ஆனால் தனியார் பேருந்து டிரைவர் அகதீஷுக்கு வழி கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அகதீஸ் பேருந்தை முந்தி சென்று டிரைவருடன் தகராறு செய்துள்ளார்.

பின்னர் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து அகதீஸ் தனது நண்பர்கள் நான்கு பேருடன் இணைந்து கரும்பால் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதில் இரண்டு பெண் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அகதீசை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அகதீஸின் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.