ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் டிராவல்ஸ் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹைதராபாத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் விபத்தின் போது பேருந்தில் 30 பேர் இருந்ததாகவும் தெரிகிறது.