பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணி அளவில் அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்தார். பின்னர் பிரதமர் மோடி அங்கு யானை சவாரி சென்றார். அசாம் மாநிலத்தில் 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார்.

அத்துடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில்  காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காசிரங்காவில் பல யானைகளும் மற்ற விலங்குகளும் உள்ளன என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.