தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. விரைவில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது உறுதியாகிவிடும். டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.