ராஜஸ்தானில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குளிர்கால விடுமுறை டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த அறிவிப்பை தொடர்ந்து ராஜஸ்தான் வாரியத்தின் 10, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி ஏப்ரல் பத்தாம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விரிவான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.