தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயர் மீண்டும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாமல் நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆளுநர் கோப்புகளை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை குறிப்பிட்டு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்துள்ளது. இந்த முறை ஆளுநர் ஒப்புதல் தருவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் தற்போது டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால் டிஎன்பிஎஸ்சிக்கு தமிழர் ஒருவரை நியமிக்க அரசு முடிவு எடுத்துள்ளது.