தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களின் விவரங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முகாம் நடத்தி சான்றிதழ்களை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இதனை மாவட்ட மேலாளர்கள் பட்டியலாக தயாரித்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் வலியுறுத்தியுள்ளார்.