மேற்கு வங்கத்தில் உள்ள சென்ட்ரல் ஜெயிலில் அப்துல் ஹாசிம் மற்றும் சஹானாரா எனும் இரண்டு கொலை குற்றவாளிகள் வெவ்வேறு கொலை சம்பவங்களில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறைக்குள் நண்பர்களாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனால் தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை குடும்பத்தினர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று இருவருக்கும் ஐந்து நாள் பரோல்  வழங்கப்பட்டு வெளியே சென்ற இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சிறையில் இருக்கும் இருவர் கூறுகையில் தாங்கள் வெளியில் சென்று சந்தோஷமான வாழ்க்கையை வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.