தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நேற்று நடந்த முடிந்தது.

இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி சார்பாக இபிஸ்-க்கு பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் பத்து தல உருவங்களுக்கு மத்தியில் ஈபிஎஸ் இன் புகைப்படத்தை இணைத்து போஸ்டர் ஒன்றை தயாரித்து வைத்துள்ளனர் . இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.