ஜூன் 4ஆம் தேதி மோடிக்கு 440 வாட்ஸ் ஷாக் கிடைக்கப் போகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். 400 இடங்களை வெல்வோம் என மோடி கூறுகிறார். ஆனால், பாஜகவுக்கு ஷாக் அடிக்கும் தேர்தல் முடிவுகளை இந்திய மக்கள் தர தயாராகி வருவதாக தெரிவித்த அவர், பாஜகவும், மோடியும் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் என்பதை நாட்டுமக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.