நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் 5G சேவையை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனம், நாளுக்கு நாள் சேவையை விரிவு படுத்தி வருகிறது.

அவ்வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மேலும் 27 முக்கிய நகரங்களில் பயிற்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது. பதன்கோட், கஷிப்பூர்மற்றும் சிந்தாமணி உட்பட நாட்டின் 13 மாநிலங்களை சேர்ந்த நகரங்களில் 5g சேவை வழங்குவதாக பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் 331 நகரங்களில் 5g சேவை வழங்கப்பட்டுள்ளது.