முன்னணியின் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஐபிஎல் நேரத்தில் புதிய டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது. அன்லிமிடெட் டேட்டா எனப்படும் பிரீபெய்ட் பயனர்களுக்கு 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ கொண்டு வந்த புதிய டேட்டா திட்டம் ஒரு நாள் வேலிடிட்டி உடன் 25 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. ஆக்டிவ் பேஸ் பிளான் இருந்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச டேட்டாவிற்கு ஜியோ ஏற்கனவே இரண்டு டேட்டா பேக்குகளை வழங்குகின்றது.