மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களை இன்று கட்டணமின்றி பொதுமக்கள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்களில் உள்ள இடங்களில் உலக பாரம்பரிய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பிரதான சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் மக்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித நுழைவு கட்ட ணமும் இலவசமாக கண்டு களிக்கலாம் என்றும் இன்று மட்டும் நுழைவு கட்டண கவுண்டர்கள் மூடப்படும் என்றும் தொல்லியல்துறை அறிவித்துள்ளது.