ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை காண மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை கண்டு களிப்பதற்கு வசதியாக 250 மாற்று திறனாளிகளுக்கு வீல் சேர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் வெற்றி பெறும் சிறந்த வீரர் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பரிசை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.