தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகப்பு விநியோகம் இன்று தொடங்க உள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரம் படி ரேஷன் கடை சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் பரிசு தொகுப்பை வழங்க ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் பரிசு தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.