தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலமாக பலரும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். கடந்த வருடம் தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் விதமாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரியிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை சார்பாக ஜனவரி 5ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் கவுண்டன்பாளையத்தில் உள்ள சுப்பையா திருமண மண்டபத்தில் நடைபெறும் எனவும் இதில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ பொறியியல் முடித்தவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.