ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி பல மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளன. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும். அதோடு, பொதுத்துறை வங்கிகள், பங்குச்சந்தைகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிற்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்