வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ (EMI) தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, இஎம்ஐ தொகையை கடைசி தேதி முடிந்த பின் ஒருவாரத்திற்குள் அபராதமின்றி செலுத்த முடியும். இந்த விதி அடுத்த ஆண்டு (2024) ஜனவரி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது. வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.