ஜார்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5  யானைகள் உயிரிழந்தது. வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்ததில் யானைகள் உயிரிழந்துள்ளது. 12 யானைகள் ஒன்றாக வனப்பகுதியில் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் 3  குட்டி யானைகள் உட்பட 5 யானைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்..