ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு மாவட்டமான சிங்பம் பகுதியில் 5 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. நேற்று இரவு பெனியசை என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வெலிகளை யானைகள் கூட்டம் கடக்க முயன்ற போது இரண்டு குட்டிகள் உட்பட ஐந்து யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் “மற்ற நான்கு யானைகள் அப்பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ளன. அவை பாதுகாப்பாக காட்டிற்குள் சென்ற பிறகுதான் இறந்த யானைகளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.