தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார். நடிகர் மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அவர் திடீரென அவருடைய இல்லத்தில் மரணம் அடைந்தார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் மனோபாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குனர் மிஷ்கின், ‘சொர்க்கத்தை சந்தோஷப்படுத்து, முடிந்தால் நரகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வை’ என கனத்த மனதுடன் கூறியுள்ளார். ‘இருள் நிறைந்த அறையில் நீங்கள் நுழையும்போது, உங்கள் கேலி, கிண்டலால் அந்த அறை வெளிச்சம் பெறும். பாராட்ட பயப்படுகிற இந்த சினிமா உலகில் பாராட்டுவதையே வேலையாக கொண்ட மனோபாலாவே… போய் வா!’ என உணர்ச்சிபொங்க கூறியுள்ளார்.