விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை தொடக்கத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். பல வருடங்கள் கடந்த இந்த நிகழ்ச்சியை கோபிநாத் அளவுக்கு யாராலும் தொகுத்து வழங்க முடியாது என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு தனி ஒரு மவுசு உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் சொந்த ஊரு பாணியில் பிரபலங்கள் வாதம் செய்கின்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்து வாய்ப்பை கொடுக்கும் வரைக்கும் காத்திருந்த பிரபலங்கள் சொந்த ஊரு பாணியில் மாறி மாறி திட்டிக் கொள்கின்றனர். இதனை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் கோபிநாத் அங்கும் இங்கும் அலைமோதுகின்றார். தமிழ் பற்று எப்படி உள்ளது என்பதை இந்த வாரம் பொங்கல் தின சிறப்பாக காணலாம் என்று நீயா நானா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அது தொடர்பான புரோமோவும் தற்போது வெளியாகி உள்ளது.