‘அயலான்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நீக்கம் செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

‘அயலான்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை  நீக்கம் செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு தர வேண்டிய ரூபாய் 1 கோடியை செலுத்தாமல் அயலான் படம் வெளியாக தடை கோரி எம்.எஸ். சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. எம் எஸ் சேலஞ்ச்  விளம்பர நிறுவனத்திற்கு ‘அயலான்’ பட தயாரிப்பு நிறுவனம் ரூபாய் 50 லட்சத்தை திருப்பி செலுத்தியதால் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூபாய் 50 லட்சத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் செலுத்துவதாகவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஜேஜேஆர் ஸ்டூடியோவிற்கு எதிரான டி.எஸ்.ஆர் தொடர்ந்த வழக்கிலும் உடன்பாடு ஏற்பட்டதால் தடை நீக்கம் செய்யப்பட்டது. எனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜே.ஜே.ஆர் நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’ திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.