இன்றைய காலகட்டத்தில் எதிர்கால வருமானத்திற்காக பலரும் தபால் அஞ்சலக திட்டம் மற்றும் வங்கி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா, பி பி எஃப் மற்றும் கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இணைந்திருக்கும் முதலீட்டாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி தொகையை உயர்த்தி வரும் இடையில் தற்போது சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் எவ்வளவு வட்டி உயரும் என்ற தகவல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.