மலையாள கன்னி மாதா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ள நிலையில் 5 நாட்களும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 7 மணி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.