தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினால் சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்ட பேரவை கூட்டம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி முதல்வர் ஸ்டாலினால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து தீர்மானத்திற்கு சம்மதம் தெரிவித்தது. மேலும் ராமர் பாலத்திற்கு பாதிப்பு இல்லாமல் இருந்தால் சேது சமுத்திர திட்டத்தை வரவேற்பதாக பாஜகவினர் கூறியிருந்தனர்.