உத்தர பிரதேஷ் மாநிலம் சஹாரன்பூரில் ஒரு மாணவி மேற்கு கால்வாயில் குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது. அங்கிருந்தவர்கள் அவளைத் தடுக்க முயன்றனர், ஆனால் மாணவி யாரின் வார்த்தையையும் கேட்காமல் கால்வாயின் நீரில் குதித்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இருப்பினும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை இந்துஸ்தான் உறுதிப்படுத்தவில்லை. அங்கிருந்தவர்களின் கூற்றுப்படி, கால்வாயில் குதிக்கும் முன் மாணவி ஃபோனில் யாருடனோ தகராறு செய்துகொண்டிருந்தாள்.

சிவானி என்ற அந்த பெண் கால்வாயில் குதித்ததும், அவரை  காப்பாற்ற சில இளைஞர்கள் முயற்சி செய்தனர். இறுதியாக, சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த  ரதன்பூர் கல்யாண்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவானியின் குடும்பத்தினர் ஹத்னீகுண்ட் பாறைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கூறுகையில், தங்களுக்கு இரு மகன்கள் மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர், அவர்களில் 19 வயது மூத்த மகள் சிவானி கால்வாயில் குதித்ததாகத் தெரிவித்தனர். அவள் இந்த முடிவை ஏன் எடுத்தாள் என்பது குறித்து குடும்பத்தினருக்கு ஏதுவும் தெரியவில்லை.

கால்வாய் ஓரத்தில் இருந்து காவல்துறைக்கு ஒரு ஆதார் அட்டை கிடைத்தது, அதன் அடிப்படையில் சிவானியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது. சஹாரன்பூர் மாவட்டத்தின் ரதன்பூரா கிராமத்தைச் சேர்ந்த இவள், ஐ.டி.ஐ. மாணவியாகவும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவராத நிலையில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.