தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். நடிகர் ராம் சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் தற்போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்காக நடிகர் ராம்சரண் அமெரிக்காவுக்கு கிளம்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு செல்வதற்காக நடிகர் ராம்சரண் விமான நிலையத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதாவது கருப்பு நிற உடையில் கழுத்தில் மாலையோடு நடிகர் ராம்சரண் வெறும் காலில் விமான நிலையத்தில் நடந்து சென்றுள்ளார். நடிகர் ராம்சரண் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளார். ஐயப்பனுக்கு விரதம் இருப்பதால் தான் தற்போது ராம்சரண் வெறும் காலில் விமான நிலையத்தில் நடந்து சென்றுள்ளார். மேலும் ஒரு முன்னணி நடிகராக இருந்து கொண்டு ராம்சரண் விரதம் இருப்பதால் வெறும் காலில் செருப்பு கூட போடாமல் விமான நிலையத்தில் நடந்து சென்றது ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.