தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்திற்கு பிறகு திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமூக விழிப்புணர்வு படமாக பகாசூரன் உருவாகியுள்ள நிலையில், செல்வராகவன் கதையின் நாயகனாகவும் நட்டி நடராஜ் மற்றும் ராதாரவி போன்றோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.‌‌ இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி ஒரு பேட்டியில் பகாசூரன் படத்திற்காக தான் வாங்கிய சம்பளம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, நான் பழைய வண்ணார்பேட்டை படத்தை இயக்கிய போது 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றேன். தற்போது பகாசூரன் படத்திற்காக 35 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளேன். மேலும் பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கோடிகளில் சம்பளம் பெறலாம் என்று கூறியுள்ளார்.