தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் சங்கர். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் முதல் படத்திலேயே பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தார். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், நண்பன், சிவாஜி, எந்திரன், அந்நியன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்த ஆர்சி 15 மற்றும் தமிழில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குனர் சங்கர் சென்டிமென்ட் பார்த்து நிறுத்திவிட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாகத்தான் பிப்ரவரி 19-ஆம் தேதி படத்தின் ஷூட்டிங்கை சங்கர் எடுக்க விரும்பாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.