“ஊராட்சி மணி” திட்டத்தை செப்.26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் ஊராட்சி மணி என்ற அழைப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் புகார்களாக தெரிவிக்கும் வகையில் 155340 என்ற சிறப்பு மைய அழைப்பு எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்துடன் “ஊராட்சி மணி” தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்கள் நிலை விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.