தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலனிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கூட விவசாயிகளுக்கு மானிய விலையில் ட்ரோன் வழங்குவது குறித்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குறித்தும் அறிவிப்பு வெளியானது.  இந்நிலையில் குறுவை பாசனத்தால் இழப்பை சந்திக்க விவசாயிகளின் ஏக்கருக்கு ரூ.35,000 வங்கிக் கணக்கில் உடனே செலுத்தவும், தென்மேற்கு பருவமழை பாதித்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக பாதி விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை தரவில்லை. அதையும் உடனே வழங்க வேண்டும். இல்லையென்றால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்