இமாச்சலப் பிரதேசம் அரசால் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது ஹோட்டல் வாடகையில் தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இமாச்சலப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகம் ஹோட்டல் அறை வாடகையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இமாச்சலம் பிரதேசத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுலா பயணிகள் நிவாரணம் பெரும் வகையில் அவர்களுக்கு ஹோட்டல் வாடகையில் சலுகை அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்த நிலையில் HPTDC யால் நடத்தப்படும் ஹோட்டல்களில் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வரை இந்த புதிய சலுகை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.