செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னையை சுற்றி இருக்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.