பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 29ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானை பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.