தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதால் நடுத்தர வசதி கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தனியார் பள்ளிகள் அடுத்த மூன்று ஆண்டு வசூல் செய்ய வேண்டிய புதிய கட்டண விகிதங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளியில் மாணவர்களின் கல்வி கட்டணம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், சீருடை மற்றும் வேன் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் இந்த கட்டணம் அனைத்தும் தனியாக வசூல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.