தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கிபி 1639 ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய twitter பக்கத்தில், பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார்.

தமிழின தமிழர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்கு சென்னை என பெயர் மாற்றினார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்து விட்ட சொல் என்பதா, ஊர் என்பதா, உயிர் என்பதா சென்னையை? சென்னை ஒட்டுமொத்த இந்தியாவை பிரதிபலிக்கும் நிலை கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவ சங்கமும் வாழிய வல்லாளர் சொன்ன தர்மமிகு சென்னை என்ற முதல்வர் ஸ்டாலின் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.