இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இதனால் இப்பொழுதே பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதில் இருந்து 350 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பரிசீலனையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாள்களில் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.